தமிழரசுக் கட்சியின் தீர்மானம் குறித்து தொடர்ந்து எழும் அதிருப்தி கருத்துக்கள்

Ilankai Tamil Arasu Kachchi M. A. Sumanthiran P Ariyanethran Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024
By Rusath Sep 04, 2024 02:40 AM GMT
Report

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் எடுக்கப்பட்ட முடிவானது எமது மக்களுக்கு ஏற்புடையது அல்ல என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நடராசா தெரிவித்துள்ளார். 

களுவாஞ்சிகுடியில் நேற்று (03.09.2024) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 

”இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் எடுக்கப்பட்ட முடிவானது எமது மக்களுக்கு ஏற்புடையது அல்ல. இவ்விடயம் தொடர்பில் வட்டாரங்களிலுள்ள மக்கள், புத்திஜீவிகள், கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் எம்மை அடிக்கடி தொடர்பு கொண்டு ஏன் இவ்வாறான முடிவை எடுத்தீர்கள், கட்சி ஏன் இவ்வாறான முடிவுக்குச் செல்ல வேண்டும்.

சஜித் தரப்பின் இரகசிய சந்திப்பு தொடர்பில் உண்மையை அம்பலப்படுத்திய மாவை

சஜித் தரப்பின் இரகசிய சந்திப்பு தொடர்பில் உண்மையை அம்பலப்படுத்திய மாவை

தமிழ் பொது வேட்பாளர் 

தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற போது சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு ஏன் வாக்களிக்கத் தூண்ட வேண்டும். எதன் அடிப்படையில் கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது? போன்ற கேள்விகளை கேட்கின்றார்கள். அதற்கு பதிலளிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையில் உள்ளேன்.

அனேகமான மக்கள் கட்சியின் முடிவை ஏற்றுக் கொள்வதாக இல்லை.எமது மக்கள் பொது வேட்பாளரை நூறுவீதம் ஆதரிக்க வேண்டும் என்ற செயற்பாட்டில் இருக்கின்றார்கள்.

இந்நிலையில், எமது கட்சி அங்கத்தவர்கள் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஏன் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிக்க வேண்டும் என்பதை கட்சி மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு உள்ளது.

கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் அதிகளவானோர் பங்குபற்றியிருக்க வேண்டும். அக்குழுவில் 43 பேர் உறுப்பினர்களாக உள்ளனர் அன்றைய தினம் கூட்டத்தில் 23 பேர் மாத்திரமே பங்கு பற்றியிருந்தனர். அதிலும் 19 உறுப்பினர்கள் தான் அவர்களது தீர்மானத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

சிங்கள வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களைப் பரிசீனை செய்து தமிழ் மக்களுக்கான சார்பு விடயங்கள் எங்கு காணப்படுகின்றதோ, அதனடிப்படையில் மக்களை வாக்களிக்கத் தூண்டலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருக்கின்றார். எமது கட்சிக்கும் சஜித் பிரேமதாவிற்கும் இடையிலே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் இருக்கின்றதா?

அநுரவுக்கு வாழ்த்து தெரிவித்த சுமந்திரன்!

அநுரவுக்கு வாழ்த்து தெரிவித்த சுமந்திரன்!

ஒப்பந்தம்  

அவ்வாறெனில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் என்ன? அதில் தமிழர்களுக்கான உரிமைகள் தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றனவா என்பதை மத்தியகுழுவில் தீர்மானம் மேற்கொண்டவர்கள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு உள்ளது.

தமிழரசுக் கட்சியின் தீர்மானம் குறித்து தொடர்ந்து எழும் அதிருப்தி கருத்துக்கள் | Tamilarasu Katchi Election Support 2024 Nadarasa

இதற்கு எமது கட்சியிலுள்ள மத்திய குழுவில் உள்ளடங்குகின்றவர்கள் கூட்டுப் பொறுப்பை ஏற்க வேண்டும். புத்திஜீவிகள், சிவில் அமைப்பினர், தமிழ் தேசியத்தை நேசிக்கின்ற சுமார் 7 கட்சிகள் இணைந்துதான் பொது தமிழ் வேட்பாளரை களமிறக்கியுள்ளார்கள்.

இந்த அமைப்புக்களுடன் தமிழரசுக் கட்சியையும் இணையுமான அழைப்பு விடுக்கப்பட்டபோதும் எமது கட்சியின் பக்கமிருந்து அவர்களுக்கு தகுந்த பதில் வழங்கவில்லை. இதுவும் ஒரு பிழையான விடையமாகும். இதற்கான காரணத்தை எமது கட்சியினர் அந்த நேரத்தில் மக்களுக்கு தெளிவுபடுத்தியிருக்க வேண்டும்.

“மக்களுக்காகத்தான் நாங்கள், எங்களுக்காக மக்கள் இல்லை.” எனவே எம்மவர்களின் முடிவின் பிரகாரம் சஜித் பிரேமதாச பாவம். இலங்கைத் தமிழரசுக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ் போன்ற சிறுபான்மைக் கட்சிகள் அவருடன் இணைவதால் பெரும்பான்மை சமூகம் ஒரு மாற்று நடவடிக்கை எடுப்பதற்குரிய வசதி ஏற்படுத்தப்படும்.

தமிழரசுக் கட்சியின் தீர்மானம் குறித்து தொடர்ந்து எழும் அதிருப்தி கருத்துக்கள் | Tamilarasu Katchi Election Support 2024 Nadarasa

அதனடிப்படையில் இது சஜித் பிரேமதாசவை தோற்கடிக்கும் ஒரு வியூகமாகவும் இது இருக்கலாம். ஏனெனில் ரணில் விக்ரமசிங்க தந்திரத்தில் சாத்தியவான். அவர் இவ்வாறான திட்டத்தை வகித்திருக்கலாம்.

அதற்கு இவர்களும் துணை போயிருக்கலாம் என்பதை என்னால் ஊகிக்க முடிகின்றது. ஏனெனில் சஜித் பிரேமதாசவுக்கு என்ன காரணத்திற்காக வாக்களிக்க வேண்டும் என்பதை அவர்கள் இற்றைவரையில் யாரும் எந்த ஊடகத்திலும் சொல்லவில்லை.

எது எவ்வாறு அமைந்தாலும் எமது கட்சியைச் சேர்ந்த இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து தமிழ் தேசியத்திற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கும் பா.அரியநேத்திரனின் சங்கு சின்னத்திற்கு மக்கள் அனைவரும் இம்முறை வாக்களித்து தமிழ் மக்களின் ஒன்றுமையை நிருபிக்க வேண்டும்” என கோரியுள்ளார். 

ரணில்- சஜித் தரப்பிற்கு இடையிலான இணக்கப்பாடு தொடர்பில் நளின் பண்டார வெளியிட்டுள்ள உறுதி

ரணில்- சஜித் தரப்பிற்கு இடையிலான இணக்கப்பாடு தொடர்பில் நளின் பண்டார வெளியிட்டுள்ள உறுதி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US