கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் கைது! (Photo)
கனடாவில் தன்னை ஒரு பொலிஸ் அதிகாரி என அடையாளப் படுத்திய தமிழ் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் அறிவித்துள்ளனர்.
Markham நகரை சேர்ந்த 25 வயதான ஜெனிசன் ஜெயக்குமார் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Markham massage நிலையத்தில் இலவச பாலியல் சேவைக்கான அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், இவர் தன்னை ஒரு பொலிஸ் அதிகாரி என அடையாள படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த சம்பவம் கடந்த 8ம் திகதி நிகழ்ந்தது. கைது செய்யப்பட்டவர் காவல்துறையில் பணியாற்றவில்லை என்பதை York பிராந்திய பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இனிவரும் காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக பொலிஸார் கைது செய்யப்பட்ட நபரின் புகைப்படத்தை வெளியிட்டனர்.
எவ்வாறாயினும், இவர் மீதான குற்றச்சாட்டுகள் எவையும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri