கனடா செல்ல முற்பட்ட தமிழ் இளைஞன் விமான நிலையத்தில் கைது
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்ட இளைஞன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாய் ஊடாக கனடாவுக்குச் செல்ல முற்பட்ட மட்டக்களப்பு - ஆரையம்பதி பிரதேசத்தில் வசிக்கும் இவர் 24 வயதான இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 3.15 மணிக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் நோக்கி பயணிக்கவிருந்த எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் பயணிப்பதற்காக இவர் விமான நிலையத்திற்கு சென்றிருந்தார்.
அதன் பின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினர் மேற்கொண்ட தொழினுட்ப ரீதியான பரிசோதனையின் போது கனடாவுக்கான கடவுச் சீட்டு போலியான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Super Singer: சூப்பர் சிங்கர் குடும்பத்தின் கடைசி Good Bye... அரங்கமே கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan
அதிரடி காட்டிய அர்ஜுன் டெண்டுல்கர்: 153 ரன் விளாசிய கேரள வீரரின் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தல் News Lankasri