வெண்ணெய் பொதியில் தமிழ் சொற்கள் இடம்பெறாமைக்கு இதுவே காரணம்! நிறுவனம் விளக்கம்
எங்கர் உற்பத்தியின் வெண்ணெய்(butter) பொதியில், தமிழ் சொற்கள் இடம்பெறாமைக்கான காரணத்தை ஃபோன்டெரா பிராண்ட்ஸ் லங்கா நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
எங்கர் வெண்ணெய் தயாரிப்பு, இலங்கையின் சந்தை பொதியிடல் விதிமுறைகளுக்கு முழுமையாக இணங்குகின்றது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், எங்கர் வெண்ணெய் சுற்றுப் பொதியில் பயன்படுத்தப்படும் மொழிகள் குறித்து வெளியிடப்படும் கவலையை தாம் உணர்வதாக ஃபோன்டெரா பிராண்ட்ஸ் லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.
எங்கர் வெண்ணெய் என்பது சர்வதேச சந்தை தயாரிப்பாகும். இது நியூசிலாந்திலிருந்து கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பல நாடுகளுக்கு தயாரிக்கப்பட்டு, தொகுக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று ஃபோன்டெரா பிராண்ட்ஸ் லங்கா குறிப்பிட்டது.
குறித்த பொதியே இலங்கைக்கும் கிடைக்கின்றது. எனவே, தயாரிப்பு பொதியில் அந்தந்த நாடுகளில் பொதுவாக பேசப்படும் மொழிகள் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் பன்முகத்தன்மையை மதிப்பதாகவும், வாடிக்கையாளர் தேவைகளை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுவதாகவும் ஃபோன்டெரா பிராண்ட்ஸ் லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இலங்கையின் நுகர்வோர் அதிகாரசபை, எங்கர் வெண்ணெய் தயாரிப்பில் காட்டப்பட்டுள்ள மொழிப்பிரயோகம் குறித்து தமக்கு எந்த முறைப்பாடும் வரவில்லை என்று கூறியுள்ளது.
முறைப்பாடுகள், இருந்தால் இந்த விடயம் குறித்து ஆராயலாம் என்று நுகர்வோர்
விவகார ஆணையத்தின் தலைவர் சாந்த திசானநாயக்க தெரிவித்தார்.
""எங்கர்" தயாரிப்பில் தமிழ் மொழி இடம்பெறாமை குறித்த ஒரு படம் சமூக
ஊடகங்களில் பகிரப்பட்ட நிலையில் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன