சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் பெண்! - உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Switzerland Kalmunai Court
By Murali Jul 02, 2021 01:58 AM GMT
Report

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சட்டவிரோதமான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் பெண் தொடர்பில் விளக்கமளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சி.ஐ.டி., சி.ரி.ஐ.டி. பணிப்பாளர்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர், சட்ட மா அதிபருக்கு இது குறித்த அறிவித்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்முனையை சேர்ந்த, 36 வயதான கருப்பையா செல்வகாந்தி எனும் பெண், சட்டத்தரணி எம்.ஏ. மதீன் ஊடாக தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை ஆராய்ந்தே, இந்த அறிவித்தலை பிறப்பித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் ஜூலை 9 ஆம் திகதி மன்றில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உயர் நீதிமன்றம் மேற்படி அதிகாரிகளுக்கு அறிவித்தல் அனுப்பியுள்ளது.

சுவிட்ஸர்லாந்தில் உள்ள தனது கணவரை பார்க்கச் செல்லும் நோக்கில், முகவர் ஒருவரிடம் ஆவணங்களை சமர்ப்பிக்க சென்ற இடத்தில், சி.ஐ.டி. என கூறிக்கொண்டோரால் கைது செய்யப்பட்டு, கடந்த 6 மாதங்களாக காரணங்கள் எவையும் வெளிப்படுத்தப்படாது தமிழ் பெண் ஒருவர் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கைது மற்றும் தடுத்து வைப்பு ஆகியன சட்ட விரோதமானது என தெரிவித்து சட்டத்தரணி மதீனினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவானது, உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, யசந்த கோதாகொட மற்றும் ஏ.எச்.எம்.டி. நவாஸ் ஆகியோர் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.

இதன்போது மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ராசிக் பாரூக் ஆஜராகி விடயங்களை முன்வைத்தார். கடந்த ஜனவரி 28ம் திகதி, மனுதாரரான பெண்ணை, சி.ஐ.டி. எனக் கூறிக்கொண்ட குழுவினர் மட்டக்களப்பு, கல்லடி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்படுவதற்கான காரணத்தை அப்போது வெளிப்படுத்தியிராத நிலையில், அவரை தடுத்து வைத்து விசாரிப்பதற்கான தெளிவான தடுப்புக் காவல் உத்தரவை முன்வைக்கவும் விசாரணை அதிகாரிகள் தவரியுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி ராசிக் பாரூக் இதன்போது சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் அவரை தற்போது தங்காலையில் உள்ள தடுப்பு மையத்தில் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் ( சி.ரி.ஐ.டி.) தடுத்து வைத்துள்ளதாகவும், அவரை சந்தித்து ஆலோசனை பெற சட்டத்தரணிகளுக்கு கூட அவகாசம் வழங்கப்படாமல் அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி ராசிக் பாரூக் குறிப்பிட்டார்.

இதனைவிட, குறித்த பெண் பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு தொடர்ச்சியாக மருத்துவ ஆலோசனைக்கமைய இருக்க வேண்டியவர் என குறிப்பிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி ராசிக் பாரூக், அது தொடர்பிலான மருத்துவ சான்றிதழ்களையும் மன்றுக்கு சமர்ப்பித்து அவர் உரிய மருத்துவ வசதிகள் கூட இன்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பதை சவாலுக்கு உட்படுத்தினார்.

அதனைவிட தான் எதற்கு கைது செய்யப்பட்டேன் என அறியும் உரிமை அப்பெண்ணுக்கும், கைதுக்கான காரணத்தை அறியும் உரிமை குடும்பத்தாருக்கும் உள்ளதாக சுட்டிக்காட்டிய சட்டத்தரணி, சட்டத்தரணியை சந்தித்து ஆலோசனை பெற்றுக்கொள்வதற்கான உரிமையும் குறித்த பெண்ணுக்கு மறுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

தனது கணவரை பார்க்கச் செல்ல தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க சென்ற இடத்தில் இவ்வாறு கைது செய்யப்பட்ட அவரின் கைதும், தடுத்து வைப்பும் சட்ட விரோதமானது என தீர்ப்பளித்து, அவரை உரிய நீதிமன்றம் ஒன்றின் முன் ஆஜர் செய்ய உத்தரவிட வேண்டும் என அவர் கோரினார்.

இந்நிலையிலேயே மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள சட்ட மா அதிபர், பொலிஸ் மா அதிபர், சி.ஐ.டி. எனும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர், சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர், அப்பிரிவின் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு மன்றில் ஆஜராகி எதிர்வரும் 9ம் திகதி விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பியது.

தொடர்புடைய செய்தி.....

ஆறு மாதங்களாக சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் பெண்! வெளியாகியுள்ள தகவல்

மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US