இந்திய பிரதமருக்கான ஆவணத்தில் கையெழுத்திடாத தமிழ்பேசும் கட்சிகள் மீண்டும் சந்திப்பு!
இந்திய பிரதமருக்கான ஆவணத்தில் கையெழுத்திடாத தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளும் இணைந்த வகையில் தமிழ்பேசும் கட்சிகள் மீண்டும் சந்திக்கவிருக்கின்றன.
இந்த தகவலை தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எமது செய்திச் சேவைக்கு இதனை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 13வது அரசியல் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இந்திய பிரதமரின் தலையீட்டைக் கோரி தயாரிக்கப்பட்ட ஆவணம் எதிர்வரும் வாரத்தில் இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் கையளிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் குறித்த ஆவணத்தில் கையெழுத்திடாதபோதும், வெளியில் இருந்து தமிழ் பேசும் கட்சிகளின் நகர்வுகளுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ள, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு முன்னணி, ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ரிசாத் பதியுதீன் தலைமையிலான இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இணைந்த நிலையில் அடுத்த கட்ட சந்திப்பு நடத்தப்படும் என்று செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது இந்திய பிரதமருக்கான ஆவணத்தின் பொதுவான விடயமாக கூறப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம் தொடர்பில் கட்சிகள் கலந்துரையாடலை நடத்தவுள்ளதாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ரோஜா சீரியலில் இருந்து வெளியேறிய ஹீரோ சிபு சூர்யன்! காரணம் இதோ.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி Cineulagam

லண்டனில் தாய் மசாஜ் செய்யும் நபருக்கு 11 ஆண்டுகள் சிறை! 2 பெண்களின் துணிச்சலால் சிக்கினார் News Lankasri

கண்டிப்பாக உன்னை கொல்வேன்! வெளிநாட்டில் வயதில் மூத்த பெண்ணை காதலித்த தமிழ் இளைஞனின் அராஜகம் News Lankasri

தலைக்கு அடியில் பல கோடிகள்! படுக்கை முழுவதும் கத்தை கத்தையாக பணம்.. தலைசுற்ற வைக்கும் புகைப்படங்கள் News Lankasri
மரண அறிவித்தல்
திரு மருதப்பு செல்வராசா
புங்குடுதீவு இறுப்பிட்டி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Bremervörde, Germany
24 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021