யாழில் தமிழ் - சிங்கள பரிமாற்ற செயற்திட்டம்
யாழ். கோட்டையில் தமிழ் - சிங்கள பரிமாற்ற செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த செயற்திட்டம் யாழ். மாவட்ட தொல்லியல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நேற்றுமுன் தினம் மாலை இடம்பெற்றது.
கொழும்பு களனி பல்கலைக்கழககத்தில் தொல்லியல் துறையில் பட்டபின்படிப்பை தொடரும் மாணவர்களுக்காக குறித்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
செயன்முறை மற்றும் அறிமுறை
இதன்போது தமிழர்களின் தொட்டுணரகூடிய மற்றும் தொட்டுணரமுடியாத மரபுரிமைகள், வழிபாட்டு முறைகள், உணவுப் பாரம்பரியங்கள், பாரம்பரிய விளையாட்டுகள், யாழ். கோட்டையின் வரலாற்று முக்கியத்துவம் என பல்வேறு விடயப்பரப்புக்கள் செயன்முறை மற்றும் அறிமுறையூடாக முன்னெடுக்கப்பட்டது.
இதில் யாழ். பல்கலைக்கழகத்தின் கலாசார சுற்றுலாத்துறை மாணவர்கள், களனி பல்கலைக்கழக தொல்லியல்துறை பட்டபின்படிப்பு மாணவர்கள், யாழ். மாவட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளான கபிலன், மணிமாறன், மத்திய கலாசார நிதியத்தின் செயற்றிட்ட முகாமையாளர் நாளக, யாழ். மாதம் தொல்லியல் திணைக்களத்தின் தன்னார்வலர்கள் என பலரும் கொண்டனர்.




ஜேவிபி மீண்டும் தன்னை அம்பலப்படுத்தி விட்டது 5 மணி நேரம் முன்

இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்திய ஆயுதங்கள்... பதிலளிக்க மறுத்த சீன இராணுவம் News Lankasri

விஜய் டிவி மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... அட இதுவும் சூப்பர் தான், என்ன தெரியுமா? Cineulagam
