தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் அமெரிக்க தூதர் ஜூலி சங்கிற்கும் இடையே சந்திப்பு
இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சாங் தலைமையிலான குழுவினருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் மலையக சிவில் சமூக தூதுக்குழுவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது நேற்று(28.06.2024) கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவரின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
எழுத்து மூலமான ஆவணம்
இதன்போது, இலங்கையின் 12 மாவட்டங்களில் பரந்து வாழும் மலையக மக்களை, இந்நாட்டில் முழுமையான குடி உரிமை கொண்ட மக்களாக முறை மாற்றம் பெரும் நோக்கில், மலையக சிவில் சமூகத்தின் ஒத்துழைப்புடன் தமிழ் முற்போக்கு கூட்டணி, நாட்டில் அடுத்து வரும் அரசியல் மாற்றங்களை ஒட்டி வகுத்து வரும் வரை - பாதை (Road Map) எழுத்து மூலமான ஆவணம் ஒன்று அமெரிக்க தூதுவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆவணத்தில் வாழ்வாதார காணி, வதிவிட காணி, கல்வி, தொழில் பயிற்சி, நில சார்பற்ற சமூக சபை ஆகிய முன்னுரிமை விடயங்கள் பற்றிய விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அத்துடன், தினக்கூலி தொழிலாளர்கள், பெருந்தோட்ட துறையில் பங்காளர்களாக முறை மாற்றம் பெறல், பெருந்தோட்ட துறையில் வாழ்கின்ற அனைத்து நிலமற்ற குடும்பங்களுக்கு வதிவிட காணி வழங்கள், கல்வி துறை தொடர்பில் விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், தொழில் நுட்பம் ஆகிய பாடங்களுங்கான விசேட ஆசிரியர் பயிற்சி கல்லூரி அமைத்தல், மலையக பெண்களுக்கான தாதியர் பயிற்சி கல்லூரி அமைத்தல் மற்றும் உலகளாவிய நாடுகளில் பரந்து வாழும் சிறுபான்மை இனத்தவர் மத்தியில் அமைய பெற்றுள்ள நில சார்பற்ற சமூக சபைகள் பற்றிய அனுபவங்களை பகிர்த்து கொள்ளல் ஆகியவை பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளன.
தமிழ் முற்போக்கு கூட்டணி கோரிக்கை
இத்தகைய நிறுவனங்களை அமைப்பது, அவை தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வது, அரசியல் அமைப்பு திருத்தங்களை மேற்கொள்வது ஆகிய பொறுப்புகளை மக்கள் ஆணையுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி முன்னெடுக்கும் என கூறியுள்ளது.
அமெரிக்க உட்பட சர்வதேச சமூக நண்பர்கள் இவற்றுக்கான தொழில் நுட்ப உதவிகள், அபிவிருத்தி உதவிகள் ஆகியவற்றை வழங்க முன் வர வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி கோரியுள்ளதுடன் இந்த கோரிக்கைகளை சாதகமாக பரிசீலிக்க அமெரிக்க தூதுவர் தலைமையிலான குழுவினர் உறுதி அளித்துள்ளனர்.
மேலும், மலையக மக்கள் இலங்கையில் மிகவும் பின் தங்கிய பிரிவினாரக இருப்பதை தாம் ஏற்று கொள்வதாகவும், அவர்களுக்கு விசேட ஒதுக்கீட்டு திட்டங்கள் தேவை என்பதை தம் அறிந்துள்ளதாகவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.
தற்போது, அமெரிக்க அரசின் சார்பில் மலையக மக்களின் நலவுரிமைகள் தொடர்பில் முன்னெடுக்க படுகின்ற வேலை திட்டங்கள் தொடர்பிலும் விளக்கி கூறி அது தொடர்பான எழுத்து மூலமான ஆவணம் ஒன்றையும் ஜூலி சாங் கையளித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலை மென் மேலும் தொடர தான் விரும்புவதாகவும், மலையக மக்களுக்கு இன்னமும் உதவிடும் சந்தர்ப்பங்களை எதிர் நோக்க அமெரிக்க அரசு விரும்புகிறது என அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், மலையக மக்கள் இந்நாட்டில் முழுமையான குடி உரிமை கொண்ட மக்களாக முறை மாற்றம் பெரும் நோக்கில் தமிழ் முற்போக்கு கூட்டணியால் முன் வைக்கப்பட்ட ஆவணத்தை மேலும் செழுமை படுத்தி, அரசியல் பிரதிநிதிகளும், சிவில் சமூக உறுப்பினர்களும் இணைந்து சர்வ அம்சங்களும் அடங்கிய காத்திரமான அறிக்கையை அமெரிக்க தரப்பினரிடம் கையளிப்பது என்றும், பின்னர் அதன் அடிபடையில் விரிவான நடவடிக்கைகளை முன்னெடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். உதயகுமார் மற்றும் தமுகூ/ஜமமு களுத்துறை மாவட்ட அமைப்பாளர் அன்டன் ஜெயசீலன் மற்றும் சிவில் சமூகம் சார்பில் பெ. முத்துலிங்கம், பேராசிரியர் மற்றும் மமமு பொது செயலாளர் விஜயசந்திரன், பேராசிரியர் சந்திரபோஸ், பேராசிரியர் ரமேஷ் ராமசாமி ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
அமெரிக்க தரப்பில், தூதுவருடன் அரசியல் அலுவலர் அடம் மிசெலோ, யூஎஸ்எய்ட் வேலை திட்ட முகாமை விசேட அலுவலர்கள் ஜனக விஜயசிறி, ரெஹானா கட்டிலன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![பிரான்ஸ் நாட்டை விட்டு அமைதியாக வெளியேறும் பிரான்ஸ் குடிமக்கள்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு செய்தி](https://cdn.ibcstack.com/article/a2345d42-b9d5-4912-84d6-9cfac959dfe2/24-667e9fe57c6eb-sm.webp)
பிரான்ஸ் நாட்டை விட்டு அமைதியாக வெளியேறும் பிரான்ஸ் குடிமக்கள்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு செய்தி News Lankasri
![இந்த 3 கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் யாரையும் திருமணம் செய்யாதீங்க.. நிராசையாக போய்விடும்- சாணக்கியரின் அறிவுரை](https://cdn.ibcstack.com/article/a2a716bb-b407-43a5-b593-cbf37213b67c/24-667e98289dbd1-sm.webp)
இந்த 3 கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் யாரையும் திருமணம் செய்யாதீங்க.. நிராசையாக போய்விடும்- சாணக்கியரின் அறிவுரை Manithan
![பல கோடிகளுக்கு சொந்தகாரியான த்ரிஷா.. வருண் மணியன் ஏமாந்தாரா? புட்டுபுட்டு வைக்கும் AL சூர்யா](https://cdn.ibcstack.com/article/e2c922b6-4439-475b-834d-fbef2a465e23/24-667e5ba59891d-sm.webp)
பல கோடிகளுக்கு சொந்தகாரியான த்ரிஷா.. வருண் மணியன் ஏமாந்தாரா? புட்டுபுட்டு வைக்கும் AL சூர்யா Manithan
![பணியாளர்களுக்கு சரியான நேரத்துக்கு சம்பளம் கொடுக்கும் நாடுகள்: முன்னிலை வகிக்கும் நாடு](https://cdn.ibcstack.com/article/b13ca092-1b64-4f3c-a31a-ae49b20df2e7/24-667e841f9705a-sm.webp)
பணியாளர்களுக்கு சரியான நேரத்துக்கு சம்பளம் கொடுக்கும் நாடுகள்: முன்னிலை வகிக்கும் நாடு News Lankasri
![முக்கிய இடத்தில் ஆல்டைம் ரெக்கார்ட் வசூல் சாதனை செய்த பிரபாஸின் கல்கி 2898 ஏடி... எவ்வளவு தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/41735971-48bc-412f-93b9-a3e3d96c3205/24-667e37dd693f0-sm.webp)