தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் - செல்வராசா கஜேந்திரன்

Release Batticaloa Press Meet Tamil political prisoner
By Kumar Jun 08, 2021 05:36 AM GMT
Report

சிறைச்சாலையில் மனிதநேயமற்ற வகையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 

இதன்போது அவர் மேலும் கூறுகையில், 

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்கு சென்றபோது சிறைச்சாலை அதிகாரிகள் அதற்கான அனுமதியை தரவில்லை.

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்று அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டிருந்தோம்.

ஆனால் நாங்கள் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கமுடியாது என சிறைச்சாலை அதிகாரிகள் கூறினார்கள். தற்போதுள்ள கோவிட் சூழலில் சிறையில் உள்ளவர்களை பார்வையிடுவதற்கு அனுமதியில்லையென்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த காலத்தில் பலர் இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் மாதத்திற்கு பின்னர் விடுதலைப் புலிகளின் புகைப்படங்களை தங்களது முகப்புத்தகங்களில் பகிர்ந்தார்கள் என்ற பெயரில் கைது செய்யப்பட்டவர்களும், கடந்த மே மாதம் 18ஆம் திகதி இலங்கை அரசாங்கத்தினால் 2009ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட தங்களது உறவுகளை நினைவு கூர்ந்தமைக்காக 10 பேரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

அதனைவிட மேலும் சிலர் சில குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டு உள்ளார்கள்.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் குடும்பத்தினர் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.அவர்களின் நிலைமை என்ன, அவர்களின் சுகாதார நிலை என்ன என்பது தொடர்பில் அவர்களின் குடும்பத்தினர் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.

உறவினர்கள் அவர்களை பார்வையிட முடியாத நிலையில் மிகுந்த பதற்றம் அடைந்துள்ளனர். கைதிகள் நெருக்கமான இடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்களா என்ற கவலை அவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

அதனடிப்படையில் உறவினர்கள் சிலர் எனது கவனத்திற்கு கொண்டுவந்ததன் அடிப்படையில் நேரில் சென்று பார்த்து நிலைமையினை அறிவதற்காக சிறைச்சாலைக்கு சென்றிருந்தோம்.

ஆனால் துரதிஷ்டவசமாக அந்த அனுமதி மறுக்கப்பட்டது. பயங்கரவாத தடைச்சட்டமானது தமிழ் மக்களை ஒடுக்குவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

கடந்த மே 18ஆம் திகதி தமிழ் மக்களின் இன அழிப்பில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவு கூரும் நிகழ்வுகளில் பங்குகொண்டற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளமை என்பது அப்பட்டமாக தமிழர்களின் ஜனநாயக உரிமையினை நசுக்குவதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசாங்கம் பயன்படுத்துவது வெளிப்படுகின்றது.

மனிதநேயமற்ற வகையில் பொலிஸார் இவர்களை கைது செய்து மோசமான கொடிய சட்டத்தின் கீழ் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

கடந்த மார்ச் மாதம் ஐ.நா.பேரவை கூட்டத்தொடரிலே 46:1 தீர்மானத்தினை தமிழர் தரப்பினை பயன்படுத்தி நிறைவேற்றியதன் மூலம் சர்வதேச விசாரணைக்கு செல்வதிலிருந்து தப்பித்துக் கொண்டுள்ளனர்.

பொறுப்புக்கூறலில் எந்தவித முன்னேற்றத்தினையும் 2012ஆம் ஆண்டிலிருந்து காட்டிராதபோதிலும் இலங்கை அரசாங்கம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்க வேண்டும்.

அவ்வாறு கொண்டு செல்லப்படாமல் தொடர்ந்து உள்ளக விசாரணையென்ற போர்வையில் முடக்கிவிட தமிழ் தரப்பு துணை நின்ற நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு செல்வதிலிருந்து தப்பித்து தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீதான ஓடுக்குமுறைகளை இந்த அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது.இதனை நாங்கள் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இந்த நிலைமைகளை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் கடந்த மே மாதம் 12ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் நினைவுக் கல் ஒன்று நடுவதற்காக எடுத்துச்செல்லப்பட்டது.

எடுத்துச்சென்றவர்கள் அச்சுறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டதன் பின்னர் அப்பகுதியில் இராணுவமும் பொலிஸாரும் சூழ்ந்து நின்றனர்.

மறுநாள் சென்றபோது அந்த கல்லை காணவில்லை. அது நிச்சயமாக இராணுவத்தினரால்தான் எடுத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டும் என்பது அனைவரது சந்தேகமுமாகும்.

அது தொடர்பான முறைப்பாட்டினை செய்தபோதிலும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் தங்களது உறவுகளை நினைவு கூர்ந்தமைக்காக அப்பாவி பெண்கள் உட்பட குடும்ப சுமைகளை சுமக்கும் பத்து பேரை கொண்டுவந்து ஈவிரக்கமில்லாமல் அடைத்து வைத்திருக்கிறார்கள் என்று மேலும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

11ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, மானிப்பாய்

06 Jul, 2014
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

02 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Philippines, Tanzania, Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வல்வெட்டித்துறை

16 Jul, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Markham, Canada

28 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, London, United Kingdom

03 Jul, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

02 Jul, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US