தமிழர் தரப்புடன் பேசுவது வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் தந்திரோபாயமா? -சுரேஷ் கேள்வி
விரைவில் வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டு நல்லிணக்க அலுவலகத்தை திறந்து வைத்து தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் சந்திக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்த நேரத்தில் ஜனாதிபதியின் இத்தகைய நடவடிக்கைகள் மக்கள்மீது சுமைகளை ஏற்றியுள்ள வரவு-செலவுத் திட்டத்திற்கு எமது ஆதரவையும் பெற்றுக்கொள்ளும் தந்திரோபாயமா என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை சந்தேகிப்பதாக அதன் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஊடக அறிக்கையொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக தீர்வு காணப்படவேண்டும் என்ற கருத்துகள் பலதரப்பட்ட சிங்கள தரப்புகளால் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
தமிழ்த் தரப்புகளிடையே ஒற்றுமை இல்லை என்பது போலவும் சிங்கள தரப்பு தமிழர் பிரச்சினையைப் பேசித்தீர்க்க தயாராக இருப்பது போலவும் படம் ஒன்று உருவாக்கப்பட்டு வருகின்றது.
இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழுவிபரம் வருமாறு: