யாழில் நடைபெறவுள்ள தமிழ் தேசிய எழுச்சி நாள்
தாயகத்தமிழரின் தேசியக்குரலை அனைத்துலகத்திற்கு பறை சாற்றும் முகமாக தமிழ் தேசிய எழுச்சி நாள் யாழில் இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வானது எதிர்வரும் 25 ஆம் திகதி காலை 10மணியளவில் கொடிகாமத்தில் அமைந்துள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் தமிழ்த்தேசியம் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலிருந்தும் பெருமளவான தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
வாருங்கள் உறவுகளே
''தந்தை செல்வா காட்டிய கொள்கையை தகர்த்தெறியாமல் பாதுகாப்போம் வாருங்கள் வடகிழக்கு தமிழ் உறவுகளே'' என ஏற்பாட்டுக்குழுவின் அழைப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், தமிழ் தேசியம் சார்ந்த கலைநிகழ்வுகள் , உரைகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam