நடிகர் விஜயகாந்தின் மரணத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இரங்கல்
ஈழத்தமிழர்களை ஆழமாக நேசித்த விஜயகாந்தின் மறைவு ஈழத்தமிழ் மக்களுக்குப் பேரிழப்பு என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளனர்.
தமிழ் திரைத்துறையில் 40 ஆண்டுகளாக முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தவரும், தமிழக தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவரும் முன்னைய தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்தின் மறைவு உலகத் தமிழர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகத் தமிழர்களின் மரியாதைக்குரியவர்
ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் மீதும், தேசியத் தலைமை மீதும் மிகுந்த அன்பும் மரியாதையும் பற்றும் கொண்டு, தனது இறுதிக்காலம் வரை வாழ்ந்திருந்தார்.
ஈழத்தமிழர்கள் மட்டுமன்றி உலகத்தமிழர்களின் மனங்களிலும் உயரிய மரியாதைக்குரியவராக இருந்தவர்.
இந்நிலையில், அவரது மறைவானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் வேளையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய தாமும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு அவரது இழப்பிலும் குடும்பத்தின் துயரிலும் பங்கெடுத்துக் கொள்வதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விமானம் விழுந்த விடுதியில் 2 வயது பேத்தியுடன் காணாமல் போன தாய்.., கவலையுடன் தேடி அலையும் மகன் News Lankasri

27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri

பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan
