தமிழ்த் தேசியக் கட்சியினால் யாழ்.தீவகத்தில் தற்சார்பு பொருளாதார திட்டம் ஆரம்பித்து வைப்பு
விழிப்புணர்வு பிரச்சாரம்
தமிழ்த் தேசியக் கட்சியினரால் தற்சார்புப் பொருளாதரம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் கட்சி தலைவரால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்பாண தீவகத்தில் வேலணை பிரதேச செயலகத்தில் என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையேந்தவேண்டும் வெளிநாட்டில்' என்ற தலைப்பிலான துண்டுபிரசுரம் பிரசாரம் கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா ஆரம்பித்து வைத்துள்ளார்.
இந்த துண்டுபிரசுர விழிப்புணர்வு பிரச்சாரம் முதற்கட்டமாக தமிழ்த் தேசியக் கட்சியின் அமைப்பாளர் சுவீகரன் நிஷாந்தனால் வேலனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. .
அவர் வீடுவீடாக சென்று துண்டுபிசுரங்களை வழங்கி மக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு இந்த விழிப்புணர்வினை முன்னெடுத்து சென்றுள்ளார்.