காத்தான்குடியில் இருந்து புறப்பட்ட கொலைக்குழு! 18 வருடங்களின் பின் விலகும் மர்மம்
மட்டக்களப்பு - ஆரையம்பதியைச் சேர்ந்த செல்லத்தம்பி கிருஷ்ணபிள்ளை (தமிழ்நாடு மனோகர்) படுகொலைக்கு பின்னால் பிள்ளையான் இல்லை என்றும், இதன் பின்னணியில் ஒரு கும்பலின் சதி இருப்பதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட தமிழ்நாடு மனோகர் ஒரு தமிழ் பற்றாளர் என்பதுடன், காத்தான்குடி இஸ்லாமியர்களுக்கு எதிராக அக்காலப்பகுதியில் பல போராட்டங்களை முன்னெடுத்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டாபய ராஜபக்சவினால் ஊடகங்களை அச்சுறுத்திய இரகசிய உளவுத்துறை கொலைக் கும்பல் தொடர்பான புதிய தகவல்கள்..
இந்நிலையில், அவர் தனது வீட்டில் மனைவி மற்றும் மகளுடன் இருந்தபோது, அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த இளைஞர்களால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தார்.
அதன் பின்னர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
எனினும், தமிழ்நாடு மனோகரின் படுகொலைக்கு பிள்ளையான் காரணம் இல்லை என்றும், இதன் பின்னணியில் இஸ்லாமியர்களை உள்ளடக்கிய ஒரு கும்பல் இருப்பதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மனோகரின் படுகொலை மற்றும் அவர் முன்னெடுத்த சமூகப் பணிகள் தொடர்பான விடயங்களை மேலும் ஆழமாக ஆராய்கிறது “உண்மைகள்” நிகழ்ச்சி.
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
வயது என்பது வெறும் எண் மட்டுமே: 33 வயதில் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் களமிறங்கும் வீரர் News Lankasri