விஜய்க்கு நேர்ந்த கதியே சிறீதரனுக்கு நேர்ந்தது! கதி கலங்கும் தமிழகம்
தமிழ்நாட்டு தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் திகதி வெளியாகியிருந்தாலும் இன்னும் தவெகவினர் ஆட்சியமைக்க முடியாத நிலையில் உள்ளனர்.
இந்தநிலையில் 108 ஆசனங்களை பெற்ற தமிழக வெற்றிக்கழகத்தினை ஆட்சியமைக்குமாறு தமிழக ஆளுநர் அழைக்காமை பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
கடந்த 3 நாட்களில் தமிழக வெற்றிகழக தலைவர் விஜய் 3 முறை ஆளுநரை சந்தித்துள்ளார். பெரும்பான்மை பெற்ற கட்சியை அழைத்து பேச வேண்டியதே முறையாக இருக்கும் நிலையில் ஆளுநர் இந்த நடவடிக்கை மத்திய அரசை தமிழகத்தில் திணிப்பதாக உள்ளது.
அதாவது மக்களால் தெரிவு செய்யப்பட்டு பெரும்பான்மை உள்ளவரை ஆட்சியமைக்க விடாமல் ஜனநாயகத்தை மீறும் செயலாக உள்ளது.
தமிழரசுகட்சியில் சிறீதரனை சுமந்திரன் பதவி வகிக்க விடாமல் இடத்தை பிடித்து வைத்திருப்பது போல என சிலர் வேடிக்கையாக குறிப்பிடுகின்றனர்.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது லங்காசிறியின் நாட்டு நடப்பு நிகழ்ச்சி..
விஜய் தமிழக முதலமைச்சராவதில் தொடரும் சிக்கல்! ஆதரவு தெரிவித்ததாக தெரிவித்து இறுதியில் கைவிரித்த ஐயுஎம்எல்
மீண்டும் போரைத் தொடங்க ட்ரம்ப் தயங்க மாட்டார்... ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஜேடி வேன்ஸ் News Lankasri