60 நாட்கள் விதிக்கப்பட்ட தடை உத்தரவு - சட்டவிரோதமாக சென்ற 500 கடற்றொழிலாளர்கள் மீது அதிரடி நடவடிக்கை
கடற்றொழில் தடைக்காலம் முடிவதற்கு முன்னர் கடலுக்கு சென்ற இராமநாதபுர மாவட்ட கடற்றொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(14.06.2026) இடம்பெற்றுள்ளது.
60 நாட்கள் தடைக்காலம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தமிழக அரசால் மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15ஆம் திகதி தொடங்கி ஜூன் 14ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த ஆண்டுக்கான 60 நாட்கள் கடற்றொழில் தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி தொடங்கி, இன்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், மண்டபம் பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் தடையை மீறி தமிழக அரசால் வழங்கப்படும் மீன்பிடி அனுமதி சீட்டு பெறாமல் நேற்று(14.06.2026) கடலுக்கு கடற்றொழிலுக்காக சென்றுள்ளனர்.

தடைக்காலம் நடைமுறையில் உள்ள போது அனுமதி சீட்டு இல்லாமல் கடற்றொழிலுக்குச் சென்ற விசைப்படகுகள் சோதனை செய்யப்பட்டு, அனைத்து விசைப்படகுகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்திலிருந்து அனுமதி இன்றி கடற்றொழிலுக்கு சென்ற மீன்பிடி விசைப் படகுகள் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக்கொண்டு கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
60 நாட்கள் தடைக்காலம் இருந்த காரணத்தினால் வெறுமையாக காணப்பட்ட இராமநாதபுர தற்போது பரபரப்பாக காணப்படுவதாக கூறப்படுகிறது.

