இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த தமிழக கடற்றொழிலாளர்கள்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு(Photo)
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 22 தமிழக கடற்தொழிலாளர்களை எதிர்வரும் 05ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நெடுந்தீவு அருகே நேற்று முன்தினம்(21.06.2023) இரவு தமிழக கடற்தொழிலாளர்கள் மீன்பிடியில் ஈடுபட்ட போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 3 படகுகளை கைப்பற்றியதுடன் அதிலிருந்த 22 கடற்தொழிலாளர்களையும் கைது செய்துள்ளனர்.
நீதிமன்றத்தின் உத்தரவு
கைது செய்யப்பட்டவர்களை காங்கேசன்துறைக்கு அழைத்து வந்து விசாரணைகளின் பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கடற்றொழில் நீரியல் வளத்துறையினர் 22 தமிழக கடற்தொழிலாளர்களையும் நேற்று(22.06.2023) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர்.
இதனை அடுத்து 22 கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 05ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 11 மணி நேரம் முன்

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri
