முதலமைச்சர் பாதுகாப்பை திரும்பப் பெறுமாறு கோரிய விஜய்.. பதவி ஏற்ற பின்பே பாதுகாப்பு!
முலாம் இணைப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யிற்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு கென்வாய் வாகனங்களை திரும்பப் பெறுமாறு அவர் தன்னார்வமாக தெரிவித்துள்ளார்.
அது மாத்திரமன்றி, பெரும்பான்மையுடன் பதவியேற்ற பிறகே முதலமைச்சருக்கான அதிகாரப்பூர்வ பாதுகாப்பை ஏற்றுக்கொள்வேன் என்றும் அவர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய இணைப்பு
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக த.வெ.க உருவெடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு மத்திய அரசால் 'Y' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று தவெக தலைவர் புறப்படும் முன்னமே கென்வாய் பாதுகாப்பு வாகனங்கள் புறப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
த.வெ.க தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்ட கென்வாய் வாகனங்கள் பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து கடந்த 3 நாட்களாக கென்வாய் வாகனங்களுடன் விஜய்க்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.
முதலமைச்சருக்கான பாதுகாப்பு
இந்நிலையில் நேற்று பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் இருந்து விஜய் வீட்டிற்கு புறப்படுவதற்கு முன்பே கென்வாய் வாகனங்கள் அங்கிருந்து எடுத்துச்செல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் நீலாங்கரை இல்லத்தில், வழக்கமாக ஒரு மாநில முதலமைச்சருக்கு வழங்கப்படும் உயர்மட்டப் பாதுகாப்பு மற்றும் கான்வாய் (Convoy) வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
பிரசாரக் களத்தில் சாதாரண ஒரு தலைவராக வலம் வந்த விஜய், உயரிய பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்த அதிரடி மாற்றங்கள் தமிழக மக்கள் மாத்திரமல்லாது சர்வதேச அளவில் பேசுபொருளாகின.
முதலமைச்சர் அந்தஸ்திலான பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் ஜாமர் (Jammer) கருவிகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் விஜய்யின் நீலாங்கரை இல்லத்தைச் சென்றடைந்தன.
இவ்வாறிருக்கையில், தற்போது குறித்த பாதுகாப்பு வாகனங்கள் விஜய் செல்வதற்கு முன்னமே புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சராகப் போகும் த.வெ.க தலைவர்..! விஜய்க்கு எதிராக உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு - சூடுபிடிக்கும் தமிழக அரசியல்