தமிழ்நாட்டு அரசியலை புரட்டிப்போட்ட வரலாற்றுச் சம்பவங்கள்.. மீண்டும் மாற்றம் நிகழுமா!
இந்தியாவையும் தாண்டி பலரின் கவனத்தை ஈர்த்துள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் குறிப்பாக எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறும்போது, அது ஆளும் தரப்பிற்கு அசைக்க முடியாத பலத்தை தந்துவிடும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு 1971 மற்றும் 1989 சட்டமன்றத் தேர்தல்களே மிகச்சிறந்த உதாரணங்கள் என சில அரசியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
1971இல் அகில இந்திய காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்திருந்தது.
ஒருபுறம் காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ், மறுபுறம் இந்திரா காந்தி தலைமையிலான இந்திரா காங்கிரஸ்.
திமுக ஆட்சி கைப்பற்றல்..
அப்போது யாரும் எதிர்பாராத திருப்பமாக, இந்திரா காந்தியுடன் கைகோர்த்தார் அன்றைய முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி.

முன்னதாக காங்கிரஸை ஆதரித்த தந்தை பெரியார், இந்தத் தேர்தலில் திமுகவை தீவிரமாக ஆதரித்தார்.
எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறியதால், திமுக 184 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது.
தமிழக தேர்தல் வரலாற்றில் ஒரு கட்சி 48.58 வீத வாக்குகளைப் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது இன்றுவரை முறியடிக்கப்படாத சாதனையாக உள்ளது.
இந்நிலையில், 13 ஆண்டுகளுக்குப் பின், எம்.ஜி.ஆர் காலமான பிறகு 1989இல் நடந்த தேர்தல், தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
அதிமுக ஜானகி அணி மற்றும் ஜெயலலிதா அணி என இரண்டாகப் பிளவுபட்டது.
அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள தமிழக தேர்தல் முடிவுகள்! வாக்கெண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய பொலிஸ் பாதுகாப்பு
எதிர்க்கட்சிகளுக்கு வாக்குச்சிதைவு..
ஜெயலலிதா அணி சேவல் சின்னத்திலும், ஜானகி அணி இரட்டைப் புறா சின்னத்திலும் களத்தில் இறங்கின. ஒருபுறம் திமுக, மறுபுறம் உடைந்த அதிமுக, இன்னொரு பக்கம் காங்கிரஸ் எனப் போட்டி மும்முனை ஆனது.

இதற்கிடையில், நடிகர் சிவாஜி கணேசன் தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்து ஜானகி அணியுடன் கூட்டணி வைத்தார். ஆனால், அவர் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தார்.
13 ஆண்டுகளுக்கு பிறகு, எதிர்க்கட்சிகளின் வாக்குச் சிதைவால் 150 இடங்களை வென்று கருணாநிதி மீண்டும் முதலமைச்சரானார்.
எனவே, எதிர்க்கட்சிகள் பிரிந்து நின்றால், அது மிகக்குறைந்த வாக்கு சதவீதத்தைக் கொண்ட கட்சியைக்கூட அரியணையில் ஏற்றிவிடும் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
1989இல் திமுக பெற்ற வாக்குகள் வெறும் 33.20 வீதம் தான், ஆனால் சிதறிய வாக்குகளால் அது 150 இடங்களாக மாறியது.
வீடு பறிபோகும் பயம் இல்லாமல் மனோஜ் செய்த காரியம், வெளுத்து வாங்கிய விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam