பதவியேற்ற கையோடு கரூருக்கு விரையும் முதலமைச்சர் விஜய்.. சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்!
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள ஜோசப் விஜய், கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், இவ்விடயம் தொடர்பில் தமிழ்நாட்டு அரச தரப்பிலிருந்தோ அல்லது தமிழக வெற்றிக்கழகத்தின் தரப்பிலிருந்தோ எவ்வித உத்தியோகபூர்வ தகவலும் வெளியாகவில்லை.
சில இந்திய தமிழ் ஊடகங்களில் வெளியாகி வரும் குறித்த செய்திகளின் படி, கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பது முக்கியம் என முடிவெடுத்துள்ள விஜய்யின் இந்த நகர்வு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
சூடுபிடித்துள்ள தமிழக அரசியல் களம்..! முதலமைச்சர் விஜய் பதவியேற்றதும் அடுத்தடுத்து பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவுகள்
முதலமைச்சராக பதவியேற்பு
தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில், 2025 செப்டெம்பர் 27 அன்று நடைபெற்ற தவெக அரசியல் பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

தற்போதைய முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (TVK) ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், கூட்ட நெரிசல் காரணமாக இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.
இந்நிலையில், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை முதலமைச்சராக பதவியேற்ற விஜய் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
YOU MAY LIKE THIS VIDEO
அதிரடி முடிவு எடுத்து நிலா கேட்ட கேள்வி, ஆடிப்போய் நின்ற சேரன்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam