அவுஸ்திரேலியாவில் தமிழ்ச் சிறுமியொருவருக்கு கிடைக்கப்பெற்றுள்ள பாராட்டு
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டி சரியாக உச்சரிக்கும் Prime Minister’s Spelling Bee தேசிய போட்டியில் வெற்றிப்பெற்ற தமிழ்ச்சிறுமியொருவர் அந்நாட்டு பிரதமரிடமிருந்து (Scott Morrison) பாராட்டுக்களையும்,பரிசுகளையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
11 வயது தமிழ்ச் சிறுமியான தீக்சிதா கார்த்திக் எனும் சிறுமியே இவ்வாறு வெற்றி பெற்று பாராட்டுக்களை பெற்றுள்ளார்.
சில பிரிவுகளில் நடத்தப்படும் இப்போட்டியில் ஆண்டு 5-6 க்கான பிரிவில் தீக்சிதா வெற்றிபெற்றார்.
இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்ட தீக்சிதா தற்போது மெல்பனில் வாழ்ந்து வரும் நிலையில்,குறித்த போட்டியில் வழங்கப்பட்ட 30 சொற்களில் 29 சொற்களை சரியாக எழுத்துக்கூட்டி உச்சரித்து போட்டியில் வெற்றிபெற்றுள்ளார்.
குறித்த போட்டியில் மொத்தமாக 490 பள்ளிகளிலிருந்து சுமார் 21 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றிருந்த நிலையில்,தேசிய ரீதியில் வெற்றிபெற்ற மூவர் இவ்வாறு பாராட்டப்பட்டுள்ளனர்.
போட்டியில் வெற்றிபெற்ற மூவருக்கும் iPads, புத்தகங்கள், பள்ளிக்கான $1000 கூப்பன்கள் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
T20 உலக கிண்ணத்தால் ஒத்திவைக்கப்பட்ட திருமணம் - நீண்டகால தோழியை மணக்கும் குல்தீப் யாதவ் News Lankasri
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam