தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள மொட்டு தரப்பு
ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களின் பொது வேட்பாளரை ஆதரிக்கும் யோசனை குறித்து, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல்பீட உறுப்பினர் கீதாநாத் காசிலிங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இதனால் நாட்டில் நடைபெற்று வரும் நல்லிணக்க முயற்சிகளுக்கு இடையூறு ஏற்படலாம் என அவர் எச்சரித்துள்ளார்.
தேசிய நல்லிணக்கம்
ஜனாதிபதி பதவியின் அடையாளம் இனம் அல்ல, அது, கொள்கைகள் மற்றும் தகுதிகளில் இருக்க வேண்டும் என்று காசிலிங்கம் கீதாநாத் வலியுறுத்தியுள்ளார்.
இந்தநிலையில்,பொதுவேட்பாளர் கொள்கை, இனப் பிளவுகளை ஏற்படுத்தி, தமிழர் பிரச்சினையை பலவீனப்படுத்தி தேசிய நல்லிணக்கத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்துள்ளார்.
எனவே தமிழ் அரசியல்வாதிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும், இதனால் ஏற்படும் வீழ்ச்சிக்கு தென்னிலங்கையைக் குறை கூறக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால், "சாதாரண மக்களே பாதிக்கப்படுவார்கள்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
