லண்டனில் நாடு கடத்தலை எதிர்நோக்கிய இலங்கை தமிழ் குடும்பத்திற்கு கிடைத்த மகிழ்ச்சி
பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்படும் ஆபத்தில் இருந்த இலங்கை தமிழ் குடும்பத்தை தொடர்ந்து பிரித்தானியாவில் தங்க அனுமதிக்க வழங்கப்பட்டுள்ளது.
மலிவு விலையில் சூரிய ஆற்றலைப் பெறுவதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டு வரும் முன்னணி விஞ்ஞானியான இலங்கை தமிழர் மற்றும் அவரது குடும்பத்தை நாடு கடத்தும் திட்டத்தை பிரித்தானிய உள்துறை அலுவலகம் மாற்றியுள்ளது.
பிரித்தானிய உள்துறை அலுவலகத்தின் நடைமுறை பிழைகளால் காரணமாக முகுந்தனும் குடும்பத்தினரும் நாடு கடத்தப்படும் ஆபத்தினை எதிர்நோக்கியிருந்த நிலையிலேயே அவருக்கு புகலிடம் வழங்கியுள்ளது.
2018ஆம் ஆண்டில் முகுந்தன் பிரித்தானியா சென்றிருந்தார். அவரின் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் 2019 இல் அவர் சுகவீனமுற்றிருந்த தனது தாயாரை பார்ப்பதற்காக இலங்கைக்கு வந்தவேளை சித்திரவதைக்கு உள்ளாகியிருந்தார். முகுந்தனின் முடிவிற்கு வந்ததை தொடர்ந்து கடந்த வருடம் அவர்களின் தொழில் அனுமதி முடிவிற்கு வந்தது.
செப்டம்பர் 2021 இல் பிரிஸ்டலில் இருந்து லண்டன் ஹோட்டலிற்கு அழைத்து சென்ற அதிகாரிகள் அவர்களுடைய புகலிடக்கோரிக்கை பரிசீலனையின் கீழ் உள்ளது என தெரிவித்திருந்தனர். எனினும் ஒக்டோபர் 11 ம் திகதி மின்னஞச்சலில் அவர்களின் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டதாக உள்துறை அலுவலகம் தெரிவித்திருந்தது.
உள்துறை அலுவலகத்தின் இந்த தவறுகள் குறித்து கடும் விமர்சனங்கள் வெளியாகியிருந்ததுடன் முகுந்தன் தனது சட்டத்தரணி மூலம் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் உள்துறை அமைச்சு தனது முடிவை மாற்றியுள்ளதுடன் முகுந்தன் குடும்பத்தினருக்கு அகதி அந்தஸ்த்தினை வழங்கியுள்ளது.
உள்துறை அமைச்சின் முடிவினை முகுந்தன் வரவேற்றுள்ளார், உள்துறை அமைச்சு என்னுடைய எனது குடும்பத்தினரின் உயிர்களை காப்பாற்றியுள்ளார் என முகுந்தன் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத்தேர்தல் தமிழர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை..! 11 மணி நேரம் முன்
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan