கனடாவில் இளம் ஈழத்தமிழ் மருத்துவரின் நெகிழ வைக்கும் செயல்
கனடாவின் ஸ்காப்ரோவில் மருத்துவர் ஒருவர் இசை மூலம் சிறுவர்களுக்கு சிகிச்சை அளித்து அதில் வெற்றி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈழத் தமிழ் மருத்துவர் ஒருவரே இவ்வாறு சிறுவர்களுடன் நெருங்கிப் பழகவும் அவர்களுக்கான நிதி திரட்டவும் இசையை பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரெஜின் ராஜேந்திரம் என்ற சிறுவர் நல நிபுணத்துவ மருத்துவரே இவ்வாறு இசை முலம் சிகிச்சை வழங்கி வருகின்றார்.
பாதிக்கப்பட்ட சிறார்களுக்கான சிகிச்சை
அவர் வெளியிட்ட இசைத் தொகுப்புகளின் ஊடாக கிடைக்கும் வருமானத்தை ஓட்டிசம் உள்ளிட்ட நோய்களினால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கான சிகிச்சைகளுக்காக பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ரெஜின், மருத்துவர் மட்டுமல்லாமல் ஒரு சிறந்த ரப் இசைக்கலைஞராகவும் திகழ்ந்து வருகிறார்.
இவர் தனது இசை மூலம் விசேட தேவையுடைய சிறார்களுக்காக பாடல்களை வெளியிட்டு நிதி திரட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டிலும் இசைத் தொகுப்புகள் மூலம் ஒரு மில்லியன் டொலர்களை திரட்டுவதற்கு உத்தேசித்துள்ளதாக அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri