25 ஆண்டுகளுக்கு பின்னர் கனடா பொலிஸாரின் வலையில் சிக்கிய தமிழர்
கனடாவில் துஸ்பிரயோக வழக்கு ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபரை 25 ஆண்டுகளுக்கு பின்னர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கனடா - ஒஷாவா பகுதியை சேர்ந்த 70 வயதுடைய நபரொருவரே 25 ஆண்டுகளுக்கு பின்னர் ரொறன்ரோ பொலிஸாரினால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசகுமார் சவரிமுத்து என்பவர் 1994 முதல் 1996 வரையான காலப்பகுதியில் பல்வேறு சிறார் துஸ்பிரயோக செயல்களில் ஈடுபட்டுள்ளதுடன்,9 முதல் 14 வயதுடைய சிறார்களை துஸ்பிரயோகம் செய்துள்ளமை ஆதாரங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஒக்டோபர் 28ம் திகதி, அரசகுமார் சவரிமுத்து மீது உத்தியோகப்பூர்வமாக 13 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்,குறித்த நபரினால் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையங்களுக்கு வருகை தந்து தமது முறைப்பாடுகளை மேற்கொள்ளுமாறும் விசாரணை அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
You My Like This Video
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri
சன் டிவி மருமகள் சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா Cineulagam