ஜனாதிபதியாக தமிழர் ஒருவர் வர முடியாது! சிறீதரன் பகிரங்கம்
இலங்கையின் ஜனாதிபதியாக தமிழர் ஒருவர் வர முடியாது எனவும் மாறாக சிங்களவர் ஒருவரே வர முடியும் எனவும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் (S.Sritharan) தெரிவித்துள்ளார்.
திருகோணமலை (Trincomalee) ஈச்சிலம்பற்று பகுதியில் இன்று (12.05.2024) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் கட்சியின் மத்திய குழு கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி வவுனியாவில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடிகள்
இதன்போது, கட்சி நிலவரங்கள் மற்றும் மக்களுடைய பொருளாதார நெருக்கடிகள் தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
செய்தி - ஹஸ்பர்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri