ஜனாதிபதியாக தமிழர் ஒருவர் வர முடியாது! சிறீதரன் பகிரங்கம்
இலங்கையின் ஜனாதிபதியாக தமிழர் ஒருவர் வர முடியாது எனவும் மாறாக சிங்களவர் ஒருவரே வர முடியும் எனவும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் (S.Sritharan) தெரிவித்துள்ளார்.
திருகோணமலை (Trincomalee) ஈச்சிலம்பற்று பகுதியில் இன்று (12.05.2024) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் கட்சியின் மத்திய குழு கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி வவுனியாவில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடிகள்
இதன்போது, கட்சி நிலவரங்கள் மற்றும் மக்களுடைய பொருளாதார நெருக்கடிகள் தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
செய்தி - ஹஸ்பர்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவை நேரடியாக எச்சரிக்கும் அமெரிக்கா - லண்டனில் சூப்பர் தூதரகத்தை கட்டும் சீனா News Lankasri

இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் - கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri
