கனடாவில் இரு தமிழ் இளைஞர்கள் அதிரடியாக கைது
கனடாவில் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் இரண்டு தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒன்டாரியோ மார்க்கம் பகுதியை சேர்ந்த 25 வயதான கோகிலன் பாலமுரளி, நோர்த் யோர்க் நகரை சேர்ந்த 25 வயதான பிரன்னன் ஸ்கந்த பாலசேகர் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிக்கரிங் நகரில் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படும் குற்றச் சாட்டில் இவர்கள் இருவரை ரொரன்ரோ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொலைக்கான இலக்கு
பிக்கரிங் Mansion Kitchen and Bar இல் கொலைக்கான இலக்கு வைக்கப்பட்டிருந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய சந்தேக நபர்கள் இருவரும் மீதும் முதல் நிலை கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் நீதிமன்றத்தில் நிருபிக்கப்படவில்லை.
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri
அந்த குழந்தையா இது!! சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக நடித்தவர் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க! சமீபத்திய புகைப்படம்.. Cineulagam