அநுர உரையாற்றவிருந்த மேடையை படம் பிடித்த தமிழ் இளைஞனுக்கு நேர்ந்த கதி
கொழும்பில் காலி முகத்திடலில் அமைக்கப்பட்ட மேடையை படம் பிடித்ததாக கூறப்படும் ஒரு தமிழ் இளைஞர் நேற்று கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொள்ளவிருந்த மே தினக் கூட்டத்திற்காக இந்த மேடை அமைக்கப்பட்டிருந்தது.
சந்தேக நபரான இளைஞனின் நடத்தையை கண்காணித்த பின்னர் அவரைக் கைது செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ் இளைஞன் கைது
அவர் பதுளை பகுதியை சேர்ந்தவர் எனவும் தற்போது வெள்ளவத்தை - கிருலப்பனையில் வசித்து வருவதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞன் பிலியந்தலை பகுதியில் பணிபுரிந்து வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஜனாதிபதி கலந்து கொள்ளவிருந்த மே தினக் கூட்டத்தின் மேடை மிகவும் ஆடம்பரமாக இருந்ததால் தான் படம் பிடித்ததாக பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam