சமய வழிபாட்டுக்கு முதலிடம் கொடுத்து புதுவருடத்தை கொண்டாடிய மலையக மக்கள்
பிறந்திருக்கும் பிலவ புத்தாண்டை மலையக மக்கள் சமய வழிபாடுகளுக்கு முதலிடத்தை கொடுத்து இன்று கொண்டாடினார்கள்.
புத்தாண்டை முன்னிட்டு ஹட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் பாலசுப்பிரமணிய சர்மா குருக்கள் தலைமையிலும், ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திலும், கொட்டகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்திலும், விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
அத்தோடு ஹட்டன் நீக்ரோதாரம விகாரையிலும் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
இன்றை நாளில் மலையக பகுதிகளில் உள்ள மக்கள்
கோவில்களுக்கு சென்று தங்களது கடமைகளை ஆரம்பித்தனர்.