ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் தலையிடாதீர்கள்! உலக நாடுகளுக்கு தலிபான் எச்சரிக்கை
ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என உலக நாடுகளை தலிபான் அமைப்பு எச்சரித்துள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கடந்த ஆண்டு கைப்பற்றி தங்களது ஆட்சி அதிகாரத்தை நிலை நாட்டியுள்ளதுடன், பெண்களுக்கு எதிராக பல தடைகளை தொடர்ச்சியாக விதித்து ஆட்சியமைத்து வருகின்றனர்.
இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் மக்கள் பொருளாதார நெருக்கடி, உணவு பற்றாக்குறை போன்ற பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றதுடன், இதனை சர்வதேச நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
உலக நாடுகளுக்கு தலிபான் அமைப்பு எச்சரிக்கை
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என உலக நாடுகளை தலிபான் அமைப்பு எச்சரித்துள்ளது.

"சுதந்திரமாக இல்லாமல் வளர்ச்சியடைய முடியாது. கடவுளுக்கு நன்றி, நாங்கள் இப்போது ஒரு சுதந்திர நாடாக இருக்கின்றோம். எங்களுக்கு வெளிநாடுகள் உத்தரவுகளை வழங்கக்கூடாது. இது எங்கள் அமைப்பு, எங்களுக்கு எங்கள் சொந்த முடிவுகள் உள்ளன எனவும் ஆப்கானிஸ்தானின் மூத்த மத தலைவர் மவுலாவி ஹெபதுலா அகுந்த்ஸாதா உலக நாடுகளை எச்சரித்துள்ளார்.
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam