இலங்கை கடற்றொழிலாளர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம்: ஈ.பி.டி.பி கட்சியின் மன்னார் இணைப்பாளர்
கடலில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களினால் இந்தியாவிற்கு எல்லை தாண்டி செல்லும் இலங்கை கடற்றொழிலாளர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (E.P.D.P.) மன்னார் மாவட்ட நிர்வாக செயலாளர் சுப்பையா சந்துரு தெரிவித்துள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (E.P.D.P) மன்னார் மாவட்ட அலுவலகத்தில் இன்று (08.06.2024) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
கைது செய்யப்படும் கடற்றொழிலாளர்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார்(Mannar) - தலைமன்னார் பகுதியை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் 2023 ஆம் ஆண்டு 11 மாதம் இந்திய கடலோர காவல் படையினரால் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்கள் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக இந்திய சிறைகளில் இருந்த நிலையில் அவர்களை விடுவிக்க கோரி அவர்களுடைய குடும்பத்தினர் எமது கட்சியை நாடி இருந்தார்கள்.

நாங்கள் அவர்களுடைய கோரிக்கையை ஏற்று குறித்த விடயத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தோம்.
இதனை அடுத்து அமைச்சர் மேற்கொண்ட முயற்சியின் பயனாக கடந்த செவ்வாய்க்கிழமை அனைத்து கடற்றொழிலாளர்களும் நாடு திரும்பியுள்ளனர்.
அதே போல் இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் விளைவுகள் காரணமாக இந்திய எல்லையை சென்றடைந்து இந்திய கரையோர காவல் படையினரால் கைது செய்யப்படும் கடற்றொழிலாளர்கள் பல காலங்கள் சிறையில் வாடும் நிலை காணப்பட்டது.

எனினும், இனி அவ்வாறான பிரச்சினைகள் காணப்படும் பட்சத்தில் எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டால் நாங்கள் நிச்சயம் அமைச்சரை தொடர்பு கொண்டு அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்போம்” என தெரிவித்துள்ளார்.
மேலும், விடுதலையான தலைமன்னாரை சேர்ந்த 5 கடற்றொழிலாளர்களும் அமைச்சரின் மன்னார் அலுவலகத்திற்கு வருகை தந்து நன்றி தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri