யாழ். தையிட்டி விகாரை பகுதியில் இரகசியமாக நில அளவீடு
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெறும் அதேநேரம், யாழ்ப்பாணம் - தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியை முழுமையாக சுவீகரிக்கும் நோக்கில் இரகசியமான முறையில் நில அளவீடு மேற்கொண்டு வரைபடமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தையிட்டிக்கிராமத்தில் பொது மக்களுக்கு சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அண்டிய நிலம் முழுவதையும் சுவீகரிக்க முயற்சிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நில அபகரிப்பின் முதல் அங்கமாக அந்தப் பகுதியை அளவீடு செய்ய நில அளவைத் திணைக்களம் முயன்ற போதெல்லாம் அந்த நிலத்தின் உரிமையாளர்களும் அரசியல்வாதிகளும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

நிலம் அளவீடு
இந்த எதிர்ப்பின் காரணமாக மாவட்ட நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் அளவீட்டை மேற்கொள்ளாது திரும்பிச்சென்று அறிக்கை சமர்ப்பித்தனர்.

இவற்றின் அடிப்படையில் தற்போது விகாரை அமைந்துள்ள பிரதேசம் மற்றும் விகாரையைச் சூழவுள்ள பகுதியென 6 ஏக்கர் நிலம் நில அளவைத் திணைக்களத்தின் தலைமைப் பணிமனை அதிகாரிகள் கொழும்பில் இருந்து வருகை தந்து அளவீட்டை மேற்கொண்டு அதன் வரை படத்தைத் தெல்லிப்பழை பிரதேச செயலாளரிடம் கையளித்துள்ளனர்.
இவற்றின் அடிப்படையில் 6 ஏக்கர் நிலம் அளவீடு செய்யப்பட்டு வரைபடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு அப்பகுதி நிலங்களின் உரிமையாளர்களை அடையாளம் காண முடியவில்லை எனவும் வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri