பாடசாலை மாணவர்களுக்கு தளபாட வசதிகள் வழங்கும் நிகழ்வு மற்றும் கல்விக்கான கருத்திட்ட விளக்க நிகழ்வில் முஸ்லிம் எயிட் தலைமையக உறுப்பினர்கள் கௌரவிப்பு
கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள அல் நஜாத் பாடசாலையில் பாடசாலை மாணவர்களுக்கான தளபாடங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான தளபாடங்கள் விநியோகமும் கல்வி அபிவிருத்திக்கான பல்வேறு செயற்பாடுகளும் மேலும் பல பாடசாலைகளுக்கு சமூக பங்குபற்றுதலுடனான கல்வி அபிவிருத்தி என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனம் ஒன்றால் வழங்கப்பட்டுள்ளன.
செயலமர்வு
மேலும், மேற்படி நிறுவன உறுப்பினர்களும் ஊழியர்களும் நேற்று (07) கிண்ணியா வலயக் கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு ஒரு செயலமர்வாக அமைந்தது.
இச் செயலமர்வு, சமூக பங்குபற்றுதலுடனான கல்வி அபிவிருத்தி என்ற தொடர் நிகழ்ச்சித் திட்டத்தின் 4ஆவது கட்டத்தை ஆரம்பிக்க முன்னர் அத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதுடன் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களுக்கும் முழுமையான விளக்கத்தை அளிக்கும் ஒரு செயலமர்வாகும்.
கிண்ணியா வலயக்கல்வி அலுவலகத்தின் ஒத்துழைப்பு மற்றும் பங்குபற்றுதலுடன் இது நடைபெற்றது. இச்செயலமர்வில், அந்நிறுவன தலைமையக உறுப்பினர்கள், வலயக் கல்வி அலுவகத்தினால் நினைவுச் சின்னங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
இருதய சத்திரசிகிச்சைக்கு காத்திருப்பு பட்டியலில் சிக்கியிருக்கும் ஐயாயிரம் நோயாளிகள்: பலர் உயிரிழக்கும் அபாயம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |