இஸ்ரேலின் நகர்வை எதிர்த்து பாலஸ்தீனத்துக்கு ஆதரவை வெளியிட்ட முக்கிய நாடு
பாலஸ்தீனிய மக்களின் நியாயமான காரணத்திற்காக முன்னெடுக்கப்படும் போரில் அவர்களுக்கு ஆதரவளிக்கும் தோளாக நாங்கள் இருப்போம் என சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் தெரிவித்துள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ்வின் குடும்பத்திற்கும் லெபனானில் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கத்திற்கும் இரங்கல் செய்தியை தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
லெபனான் தேசிய எதிர்ப்பு இயக்கத்திலும், அதன் ஆதரவாளர்களும் செலவை பொருட்படுத்தாமல் நேர்மையான பாதையில் விடாமுயற்சியுடன் செயற்பட்டுள்ளனர் என பஷர் அல்-அசாத் சுட்டிக்காட்டியுள்ளார்.
அறிவுசார் வலையமைப்பு
சிறந்த தலைவர்கள் போராட்டத்தின் கோட்பாட்டை, அதன் பாதை மற்றும் போக்கை உருவாக்குகிறார்கள் என்றும், மேலும் அவர்கள் ஒரு அறிவுசார் வலையமைப்பையும், எதிர்ப்பு மற்றும் மரியாதைக்கான நடைமுறை அணுகுமுறையையும் விட்டுச் செல்கிறார்கள் என்று சிரிய ஜனாதிபதி கவலை வெளியிட்டுள்ளார்.
மேலும், லெபனான் எதிர்ப்பு இயக்கம் ஆக்கிரமிப்பை எதிர்கொண்டு போராட்டம் மற்றும் நீதியின் பாதையில் அதனை தொடர வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.
அத்தோடு , சிரியாவும் இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கமும் "சியோனிச எந்திரத்திற்கு எதிரான போரில்" கட்டுக்கடங்காமல் இருப்பதாக அசாத் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
|