ஐ.நாவின் தவறுகளால் தொடரும் மத்திய கிழக்கு மோதல்கள்: சிரியா கடும் குற்றச்சாட்டு
புதிய இணைப்பு
மத்திய கிழக்கில் தொடரும் பரவலான மோதல்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் என்பன சர்வதேச ரீதியில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்த வழிவகுத்துள்ளதாக சிரியாவின் வெளியுறவு அமைச்சர் பாஸ்சம் சபாக் கவலை வெளியிட்டுள்ளார்.
இவை அனைத்தும், பலதரப்பு இராஜதந்திரத்தின் தோல்விகளாலும், ஐக்கிய நாடுகள் சபை அதன் ஸ்தாபக நோக்கங்களை அடையத் தவறியதாலும் ஏற்பட்டவை என அவர் மேலும் கூறியுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர், "நாங்கள் இராஜதந்திரம் மற்றும் மோதல்களை அமைதியான முறையில் தீர்த்துவைக்க முயன்றபோது, இன்று அதிக நேரடி போர்கள் மற்றும் பயங்கரவாத கருவிகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் மேலேத்தேய முகவர்களுக்கு இடையிலான போர்களை நாங்கள் காண்கிறோம்.
நிலையான வளர்ச்சி
அனைவருக்கும் நிலையான வளர்ச்சியை அடைவதில் முயற்சிகள் மற்றும் வளங்களை முதலீடு செய்வதற்குப் பதிலாக, சிலர் மற்ற நாடுகளின் வளங்களை கைப்பற்ற முயற்சிக்கின்றனர்.
மேலும் எமது நாடுகளை வறுமை மற்றும் அழிக்கும் ஒருதலைப்பட்ச கட்டாய நடவடிக்கைகளை போர்கள் மூலம் திணிக்கிறார்கள்.
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சிரியா இணையற்ற துன்பங்களை அனுபவித்து வருகிறது.
அதன் வளர்ச்சி முன்னேற்றத்தை சிதைக்கவும், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும், குழப்பத்தை பரப்பவும், பில்லியன் கணக்கான டொலர்கள் செலவிடப்படுகிறது." என்றார்.
முதலாம் இணைப்பு
பாலஸ்தீனிய மக்களின் நியாயமான காரணத்திற்காக முன்னெடுக்கப்படும் போரில் அவர்களுக்கு ஆதரவளிக்கும் தோளாக நாங்கள் இருப்போம் என சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் தெரிவித்துள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ்வின் குடும்பத்திற்கும் லெபனானில் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கத்திற்கும் இரங்கல் செய்தியை தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
லெபனான் தேசிய எதிர்ப்பு இயக்கத்திலும், அதன் ஆதரவாளர்களும் செலவை பொருட்படுத்தாமல் நேர்மையான பாதையில் விடாமுயற்சியுடன் செயற்பட்டுள்ளனர் என பஷர் அல்-அசாத் சுட்டிக்காட்டியுள்ளார்.
அறிவுசார் வலையமைப்பு
சிறந்த தலைவர்கள் போராட்டத்தின் கோட்பாட்டை, அதன் பாதை மற்றும் போக்கை உருவாக்குகிறார்கள் என்றும், மேலும் அவர்கள் ஒரு அறிவுசார் வலையமைப்பையும், எதிர்ப்பு மற்றும் மரியாதைக்கான நடைமுறை அணுகுமுறையையும் விட்டுச் செல்கிறார்கள் என்று சிரிய ஜனாதிபதி கவலை வெளியிட்டுள்ளார்.
மேலும், லெபனான் எதிர்ப்பு இயக்கம் ஆக்கிரமிப்பை எதிர்கொண்டு போராட்டம் மற்றும் நீதியின் பாதையில் அதனை தொடர வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.
அத்தோடு , சிரியாவும் இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கமும் "சியோனிச எந்திரத்திற்கு எதிரான போரில்" கட்டுக்கடங்காமல் இருப்பதாக அசாத் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
|

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 4 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
