யாழில் தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர் மீது வாள் வெட்டுத்தாக்குதல்
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் நடாத்தும் உரிமையாளர் மீது இன்றிரவு வாள் வெட்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தொல்புரம் மேற்கு சுழிபுரம் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய ஒருவர் மீதே இவ்வாறு வாள் வெட்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த நபர் தனது கடையை மூடிய பின்னர் காங்கேசன்துறை வீதி ஊடாக வீடு நோக்கி சென்று கொண்டிருந்த போது மனோரா திரையரங்குக்கு அருகில் வைத்து வாள் வெட்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகளில் வெளியான தகவல்
இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதுடன்,முன்பகை காரணமாகவே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
