யாழில் வாள்வெட்டு கும்பல் அட்டகாசம்: பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகம் (video)
யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பகுதியில் ஹயஸ் ரக வானில் வந்த அடையாளம் தெரியாத குழுவொன்று மோட்டார் சைக்கிள் வந்த இளைஞர் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இந்த சம்பவம் இன்று ( 04.12.2023) திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகம்
மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் சிலர் தெல்லிப்பழை பகுதியில் பயணித்த போது ஹயஸ் ரக வானில் வந்த வாள்வெட்டு குழுவினர் இளைஞர் ஒருவர் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதலை நடாத்திவிட்டு மருதனார்மடம் நோக்கி தப்பிச்சென்றுள்ளதாக தெரியவருகின்றது.
பொலிஸ் நிலையம் முன்பாக கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மோட்டார் சைக்கிளில் வந்த வாள்வெட்டு குழுவினரை துரத்திச்சென்ற போதும் அவர்கள் தப்பிச்சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்போது வானை நோக்கி பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகமும் நடத்தியுள்ளதாகவும்
தெரியவருகின்றது.
சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam