யாழில் இளைஞரொருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்!
யாழ். அச்சுவேலி - மகிழடி வைரவர் கோவில் பகுதியில் இன்று இளைஞரொருவர் மீது வன்முறைக்குழுவொன்று துரத்தி துரத்தி வாள்வெட்டு நடத்தியுள்ளது.
இரு குழுக்களுக்கிடையில் தொடர்ச்சியாக முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் கூறுகின்றனர்.
இந்நிலையில் ஒரு குழுவை சேர்ந்த இளைஞன் அச்சுவேலி நகருக்கு வந்திருந்த நிலையில் மற்றைய குழுவை சேர்ந்தவர்கள் அவரை துரத்தி துரத்தி வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்தில் பாரதி வீதி பத்தமேனியை சேர்ந்த 27 வயதான இளைஞன் ஒருவனே வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் சிக்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
