யாழ்ப்பாணத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகனுக்கு சுவிட்ஸர்லாந்தில் நேர்ந்த துயரம்
சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் இலங்கை தமிழர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் ஸ்தலத்தில் மகன் உயிரிழந்த நிலையில், தந்தை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றையதினம் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

இலங்கையின் சுழிபுரம் கிழக்கை பூர்வீகமாக கொண்டவர்கள்
விபத்தில் இலங்கை தமிழர்களான தந்தை மற்றும் மகன் உயிரிழந்த நிலையில் அவர்களின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இலங்கையின் சுழிபுரம் கிழக்கை பூர்வீகமாக கொண்ட தனபாலசிங்கம் கண்ணன் (69) மற்றும் கண்ணன் சுரேஸ் (34) ஆகிய இருவருமே விபத்தி்ல் உயிரிழந்துள்ளனர்.
இவ் விபத்தில் சிக்கி இருவரும் உயிரிழந்த சம்பவம் சுவிஸ் வாழ் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri