யாழ்ப்பாணத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகனுக்கு சுவிட்ஸர்லாந்தில் நேர்ந்த துயரம்
சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் இலங்கை தமிழர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் ஸ்தலத்தில் மகன் உயிரிழந்த நிலையில், தந்தை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றையதினம் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

இலங்கையின் சுழிபுரம் கிழக்கை பூர்வீகமாக கொண்டவர்கள்
விபத்தில் இலங்கை தமிழர்களான தந்தை மற்றும் மகன் உயிரிழந்த நிலையில் அவர்களின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இலங்கையின் சுழிபுரம் கிழக்கை பூர்வீகமாக கொண்ட தனபாலசிங்கம் கண்ணன் (69) மற்றும் கண்ணன் சுரேஸ் (34) ஆகிய இருவருமே விபத்தி்ல் உயிரிழந்துள்ளனர்.
இவ் விபத்தில் சிக்கி இருவரும் உயிரிழந்த சம்பவம் சுவிஸ் வாழ் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam