சுவிட்சர்லாந்தில் மகளுக்கு நேர்ந்த கதி: மன்னிப்பு கோரிய இலங்கை தாய்
சுவிட்சர்லாந்தில் செங்காலன் மாகாணத்தில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த தாயொருவர் தனது பத்து வயது பெண் குழந்தையை தகாத வார்த்தைகளால் திட்டியமை மற்றும் துன்புறுத்தியமை தொடர்பான சிசிடிவி காட்சிகள் அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பலரும் குறித்த பெண்ணுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில் குறித்த தாய் அதே சிசிடிவி முன் தனது பிள்ளைகளிடம் மன்னிப்பு கேட்பது போன்றதொரு காணொளி தற்போது வெளியாகியுள்ளது.

மன்னிப்பு கோரிய தாய்
தனது தவறை தான் உணர்ந்துள்ளதாகவும், குறித்த காணொளி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் கருத்துக்களால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் அந்த தாய் குறிப்பிட்டுள்ளார்.
என்ற போதும் தற்போது குறித்த காணொளியும் தற்போது பேசுபொருளாகியுள்ளதுடன், குறித்த தாய் பொலிஸாரிடமிருந்து தப்பிப்பதற்காக இவ்வாறான காணொளியை வெளியிட்டுள்ளதாகவும் சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan