சுவிஸிலிருந்து சென்ற பயணிகள் விமானம் அவசரமாக தறையிறக்கம்
சுவிஸிலிருந்து சென்ற பயணிகள் விமானம் அவசரமாக தறையிறக்கம் சுவிட்சர்லாந்தில் இருந்து ஜேர்மனுக்கு செல்ல புறப்பட்ட விமான சில நிமிடங்களில் மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளன.
சூரிச் விமான நிலையத்தில் இருந்து இன்று காலை பெர்லினுக்கு சென்ற LX974 என்ற சுவிஸ் விமானமே அவரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானம் இன்று காலை 7.42இற்கு விமான நிலையத்திலிருந்து பயணிகளுடன் புறப்பட்டது. எனினும் 18 நிமிடங்களில் குறித்த விமானம் மீண்டும் சூரிச் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
அவசரமாக தரையிறக்கம்
பல தீயணைப்பு வாகனங்களும் அங்கு விரைந்து சென்ற நிலையில், பயணிகள் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர்.
விமானியின் அறையில் அசாதாரணமான வாசனை உணரப்பட்டதை அடுத்தே விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக, சுவிஸ் விமான நிறுவனப் பேச்சாளர் தெரிவித்தார்.
தரையிறக்கப்பட்ட பயணிகள் சில மணி நேரங்களில் மற்றுமொரு விமானம் ஊடாக ஜேர்மன் நோக்கி அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 5 மணி நேரம் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
