மேல் மாகாண இடைநிறுத்தப்பட்ட தவணை பரீட்சைகள் தொடர்பில் தகவல்
மேல் மாகாண பாடசாலைகளில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பரீட்சைகள் இன்று ஆரம்பமாக உள்ளதாக மேல் மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.
அந்தவகையில், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 10 ஆம் மற்றும் 11 ஆம் தரப் பரீட்சைகள் இன்று (06.3.2024) முதல் மீண்டும் நடைபெறுகின்றன.
சமூக வலைதளங்களில் கசிவு
பரீட்சைக்கு முன்னதாக அறிவியல், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள்கள் சமூக வலைதளங்களில் வெளியானதால் 10 ஆம் மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பரீட்சைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
எனவே தவணைப் பரீட்சையில் இதுவரை நடத்தப்படாத பாடங்களுக்கான பரீட்சைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 23 மணி நேரம் முன்

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

வெளிவந்த மனோகரின் சதி, அப்பாவை தள்ளிவிட்ட கொதித்தெழுந்த நிலா, தரமான சம்பவம்.. அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் Cineulagam

சரியான சாப்பாடு இல்லாமல் கிழிந்த உடையுடன்.., மாணவர்கள் முன்பு கிரிக்கெட் வீரர் நடராஜன் எமோஷனல் News Lankasri
