வெளிநாடுகளில் மருத்துவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி இடைநிறுத்தம்!
வெளிநாடுகளில் மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பயிற்சி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை மருத்துவர்கள் துறைசார் நிபுணத்துவம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் வெளிநாடுகளில் கற்கை நெறிகளை பூர்த்தி செய்வது வழமையானதாகும்.
டொலர் பிரச்சினை
நாட்டில் நிலவி வரும் டொலர் பிரச்சினை காரணமாக இவ்வாறான பயிற்சிகளுக்கு மருத்துவர்களை அனுப்பி வைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இது குறித்து அறிவித்துள்ளார்.
கடிதம் ஒன்றின் மூலம் இந்த விசேட பயிற்சி நெறிகளுக்கான பயணங்களை இடைநிறுத்துமாறு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.
எவ்வாறெனினும், சொந்த செலவில் பயிற்சி நெறிகளுக்காக செல்லும் மருத்துவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் செலவு செய்து இந்த பயற்சி நெறிகளுக்காக அனுப்பி வைக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
