இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகள் மீள முன்னெடுக்கப்படும் – மஹிந்தானந்த
இடை நிறுத்தப்பட்டுள்ள கிராமங்களின் அபிவிருத்தி பணிகள் மீளவும் முன்னெடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே (Mahindananda Aluthgamage ) தெரிவித்துள்ளார்.
கோவிட் பெருந்தொற்று நிலைமைகளின் காரணமாக அபிவிருத்திப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் உள்ளுராட்சி மன்றங்களை பிரதிநிதித்துவம் செய்யும் பிரதிநிதிகளுக்கு 30 லட்சம் ரூபாவும், கிராம சேவகர் பிரிவிற்கு 40 லட்சம் ரூபாவும் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு மேலதிகமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அபிவிருத்தி பணிகளுக்காக 100 லட்சம் ரூபா இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்ய நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 22 மணி நேரம் முன்

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
