வவுனியாவில் இளைஞனை தாக்கிய சந்தேக நபர்கள் தலைமறைவு: பொலிஸார் வலைவீச்சு
வவுனியாவில் கடந்த இரு தினங்களுக்கு முன் இளைஞன் ஒருவரைத் தாக்கி காயப்படுத்திய சந்தேக நபர்கள் வவுனியாவிலிருந்து தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்களைத் தேடி கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் கடந்த 28ஆம் திகதி இரவு இளைஞன் ஒருவர் மீது நொச்சிமோட்டை பகுதியில் வைத்துத் தாக்குதல் நடாத்திய சம்பவம் குறித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞனின் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது மூன்று நபர்கள் இச்சம்பவத்தில் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.
அவர்களைத் தேடி அவர்களின் வீடுகளுக்குச் சென்றபோது அவர்கள் தலைமறைவாகியது தெரிய
வந்துள்ளதாகவும் அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும்
முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர் .
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri