கொழும்பில் அதிவேக மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது
கொழும்பு ஹைலெவல் வீதியில் அதிவேக மோட்டார் பந்தயத்தில் ஈடுபட்ட 11 இளைஞர்கள் இன்று அதிகாலை மஹரகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மஹரகம, பன்னிபிட்டிய, கொட்டாவ, எரவ்வல, பிலியந்தலை உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், 18 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட 11 இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
மக்களுக்கு இடையூறு
இரவு நேரங்களில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள் பந்தயம் நடப்பதாக பொலிஸாருக்கு அவசர அழைப்பு பிரிவுக்கு நேற்றிரவு பல்வேறு தொலைபேசி அழைப்புகள் கிடைத்திருந்தன.
அதனையடுத்து பொலிஸாரின் இந்த திடீர் சோதனையின் போது, அதிவேக மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களின் மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri

லண்டனில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்... தாயாரும் இரண்டு பிள்ளைகளும்: வெளிவரும் பகீர் பின்னணி News Lankasri
