கொழும்பில் அதிவேக மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது
கொழும்பு ஹைலெவல் வீதியில் அதிவேக மோட்டார் பந்தயத்தில் ஈடுபட்ட 11 இளைஞர்கள் இன்று அதிகாலை மஹரகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மஹரகம, பன்னிபிட்டிய, கொட்டாவ, எரவ்வல, பிலியந்தலை உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், 18 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட 11 இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
மக்களுக்கு இடையூறு
இரவு நேரங்களில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள் பந்தயம் நடப்பதாக பொலிஸாருக்கு அவசர அழைப்பு பிரிவுக்கு நேற்றிரவு பல்வேறு தொலைபேசி அழைப்புகள் கிடைத்திருந்தன.

அதனையடுத்து பொலிஸாரின் இந்த திடீர் சோதனையின் போது, அதிவேக மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களின் மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 14 மணி நேரம் முன்
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri