இவரை தெரியுமா..! பொது மக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்
பெண்ணொருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் சந்தேகநபரை கைது செய்ய பொது மக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.
கடந்த 2025.04.18அன்று மத்துகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொலஹேன பிரதேசத்தில் 34 வயதான பெண்ணொருவர் கூர்மையான ஆயுதத்தால் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்தக் குற்றச்செயல் தொடர்பாக மத்துகம நீதவான் நீதிமன்றில் விடயங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளதுடன், இதில் தொடர்புடைய சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பியோடி தலைமறைவாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரின் தகவல்
இதற்கமைய, சந்தேகநபரைக் கைது செய்ய பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
- பெயர்: பிராமணகே தொன் சனத் ரவீந்திர நிலாந்த
- முகவரி: இல. 78/01, இஹலகந்த, அகலவத்தை.
- தேசிய அடையாள அட்டை இலக்கம்: 840321401V
இந்த விபரங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால் தலைமையகப் பொலிஸ் பரிசோதகர் - மத்துகம: 071 - 8591701, பொறுப்பதிகாரி (குற்றத் தடுப்பு பிரிவு) - மத்துகம: 071 - 8594381 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam