வைத்தியசாலையில் கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டு - மற்றுமொரு சந்தேகநபர் திருமலையில் கைது
கொழும்பு லங்கா வைத்தியசாலையில் இருந்து கண்டுக்கப்பட்ட கைக்குண்டு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் கொழும்பு லங்கா வைத்தியசாலையில் மீட்கப்பட்ட கைக்குண்டு தொடர்பாக திருகோணமலையைச் சேர்ந்த பிரதான சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் மூலம் மற்றுமொரு சந்தேகநபர் திருகோணமலையில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் கன்னியா விளாங்குளம்- பீலியடி பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் கீர்த்திபன் (24வயது) எனவும் தெரியவருகின்றது.
கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட குறித்த நபரைக் கொழும்புக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

கண்ணாடியை திறந்ததும் அசுர வேகத்தில் தாக்கிய Eastern Indigo Snake... பதறவைக்கும் வைரல் காணொளி! Manithan

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam
